இரு நிலை உள்ள றசூல்.
தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்
நான் உங்கள் போன்ற மனிதனே என்று சொன்ன நாபீகள் கோமான்.
நபீ (ஸல்) அவர்களுக்கு இரு நிலைகள் உள்ளன.
- தங்களை உயர்த்திப் பேசும் நிலை.
- தங்களை தாழ்த்திப் பேசும் நிலை. பணிவை வெளிப்படுத்தும் நிலை.
இவ்விரு நிலைகளில் தங்களை உயர்த்திப் பேசும் நிலையை "ஜலால்" என்றும், தாழ்த்திப் பேசும் நிலையை "ஜமால்" என்றும் சுருங்கச் சொல்லலாம்.
நான் உங்கள் போன்ற மனிதனே என்று சொன்ன நாபீகள் கோமான்.
انا سيد ولد ادم
(நான் ஆதமுடைய மக்களுடைய தலைவன் ) என்றும்,
انا اول من ينشق عنه القبر
(மறுமையில் கப்ருகளிலிருந்து முதன்முதலாக வெளியாகுபவன் நான்தான்)
என்றும் கூறியுள்ளார்கள் என்பதை இங்கு சிந்தனைக்கெடுத்துப் பார்க்கவேண்டும்.மேலே எழுதிக் காட்டிய நபீகள் கோமானின் ஜலால் ஜமால் என்னும் இரு நிலைகளும் அல்லாஹ்விலும் உண்டு.