நான் எனும் நீ !
Posted by islamiyailakku on 6:13 PM
நான் எனைத்தேடியத்தில்
நானின்றிப் போனேனே
வான் மறை ஒன்றின்றேல்
கானலாய் இருப்பேனே
கண்டவன் என்றப்பே! கண்
கண்டதும் என்றப்பே!
யாரிடம் சொல்லுவது
கண்டவர் யாருண்டு!
கற்களாய் முட்களாய்
செடிகளாய் மரங்களாய்
வஸ்துவாய் தெரிந்ததெல்லாம்
இன்று...
ஹக்கனாய் றப்பனாய்
ஆதியாய் நீதியாய்
பூர்வீக ஜோதியாய்
கண்டுகொண்ட இன்பநிலை
எதைக்கொண்டு உணரவைப்பேன்!
வான் மறை ஒன்றின்றேல்
கானலாய் இருப்பேனே
கண்டவன் என்றப்பே! கண்
கண்டதும் என்றப்பே!
யாரிடம் சொல்லுவது
கண்டவர் யாருண்டு!
கற்களாய் முட்களாய்
செடிகளாய் மரங்களாய்
வஸ்துவாய் தெரிந்ததெல்லாம்
இன்று...
ஹக்கனாய் றப்பனாய்
ஆதியாய் நீதியாய்
பூர்வீக ஜோதியாய்
கண்டுகொண்ட இன்பநிலை
எதைக்கொண்டு உணரவைப்பேன்!