வேறில்லை.

Posted by islamiyailakku on 6:42 AM




------------------------------------------------------------------------------------
அகந்தனில் இலங்கிய ஆதியை கண்டிட 
ஆஷிகே நீரும் ஆசைவைப்பீர் 
ஜோதி இலங்கிய துய்யோனைக் கண்டிட 
தொகுத்து நீ என்பதை அழித்துடுவீர்
 --------*---------

கல்பதன் காட்சியை கண்டு தரிசிக்க 
ஜதுபெனும் இஷ்கை ஏற்றிடுவீர் 
ஜாமிஉல் அஸ்மாவை ஞாபகம் உடன் கல்பில் 
காமிலிடம் கேட்டு தெரிந்திடுவீர்!
 --------*---------

காணலை நேரொத்த மாய துன்யாவினில் 
காலத்தை வீணிலே தள்ளிடாதீர் 
மாயுமும் மாய்ந்து மஹ்பூபைச் சேர்ந்து நீர்
மாறா அமிர்தத்தை அருந்திடுவீர்!
     --------*---------

ஆலத்தில் இலங்கிடும் அஹதெனும் பொருலதை
அனுதினம் அஹந்தனில் நினைத்திடுவீர்
கோலத்தில் அதுநின்று குறிப்பாயிலன்கிடும்
ஹூ என்பதை அன்றி வேறில்லையே !

இஸ்லாமிய இலக்குக்காக - ஆஷிகுல்லாஹ்- 
Categories: