Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Sunday, January 29, 2012

எல்லாம் அவன்.

இறைஞான அமுதங்களை திரை இன்றி மலரச்செய்த இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட எல்லாம் அவன் என்ற தலைப்பிலான உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது. 

Saturday, January 28, 2012

இஸ்லாத்தின் பார்வையில் மௌலிதும் மீலாதும்?

இலங்கை நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மர்ஹூம் அஷ் ஷஹீத் மௌலவீ MSM பாறூக் காதிரீ அன்னவர்களால் மீலாத் விழா ஒன்றின் போது ஆற்றப்பட்ட உரையினை எமது இஸ்லாமிய இலக்கு மீலாத் சிறப்புரையாக வழங்குகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, January 27, 2012

மீலாதுன் நபீ பற்றிய தெளிவுகள்.



 அஸ்ஸலாமு அலைக்கு.
 
எமது இஸ்லாமிய இலக்குக்காக மதிப்பிற்குரிய சகோதரர் இப்னுல் ஜுனைத் அவர்களால் அனுப்பப்பட்ட ஆக்கத்தை உங்களின் பார்வைக்காய் எமது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவருக்கு எமது நன்றிகள்.

புனித றபீஉனில் அவ்வல் வந்து விட்டால் முஸ்லிம்கள் மத்தியில் இது எம் பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் என்ற உணர்வும்,அறியாமை இருள் நீக்கி உம்மத்தினரை ஒளி பெறச்செய்த மா நபீ புகழ் பாடி விழாக் காணும் வழக்கமும் இருந்து வருகின்றது. மாறாக தமது அறியாமையின் காரணத்தால் இதை இஸ்லாத்தின் பார்வையில் நூதன செயல் என்று போலிப் பிரச்சாரங்களில் காலத்தை வீணாக்கக் கூடியவர்களும் உள்ளனர். இவர்கள் கூறக்கூடிய குற்றச்சாட்டுக்களையும் அதற்கான தெளிவையுமே இங்கு நாம் தருகின்றோம்.

Thursday, January 26, 2012

நபிகளாரின் ரகசியம்.



நபி பெருமான் (ஸல்) அவர்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் சமயம் சில விடயங்கள் எமக்கும் எம்முடைய சிந்தனைக்கும் புலப்படாத ஒன்றாகவே அமையும். அதனை கற்றறிந்த அண்ணலாரின் மகிமை புரிந்த உலமக்களினாலேயே திறம்பட தெளிவு படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை.


அந்த அடிப்படையில் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட "நபிகளாரின் ரகசியம்" என்னும் தலைப்பிலான உரையினை உங்களுக்கு வழங்குவதன் மூலம் கண்மணியம் நாயகம் (ஸல்) அவர்களின் புகழை உயர்த்திக் காட்டலாம் என்ற தூய எண்ணத்தோடு இதோ உங்கள் செவிகளுக்கு விருந்தாக...
 

Tuesday, January 24, 2012

வாஜிபான மீலாத்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

சர்வ உலக இரட்சகனான அல்லாஹ்வுக்கே சர்வ புகழும். சலவாத்தும் சலாமும் ரஹ்மதுன் லில் ஆலமீன் செய்துனா முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீதும். அன்னவர்கள் குடும்பத்தார் சகாபாக்கள் தாபிஈன்கள், தபஉத்தாபிஈன்கள் அனைவர்மீதும் உண்டாவதாக. 

நபி பெருமானார் பிறந்த தினத்தை "முஸ்லீம்களாகிய" நாம் அனைவரும் கொண்டாட இருக்கிறோம். நபி (ஸல்) அன்னவர்கள் பெயரால் உலகின் பல்வேறு இடங்களிலும் இன்று மீலாத் விழாக்கள் கொண்டாடப்பட்டுக்  கொண்டுதான் இருக்கிறது. பெருமானாரின் புகழ் பாடக் கூடிய மீலாத் விழாவை நடாத்துவது மார்கத்தில் "வாஜிபான" கடமை ஆக்கப்பட்ட விடயமா? அல்லது சுன்னத் ஆக்கப்பட்ட விடயமா? அல்லது ஹராமாக்கப்பட்ட விடயமா? என்பதை நாம் ஆராய்ந்து பார்த்தல்; நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது, அன்னவர்கள் பிறந்த தினத்தில் நாம் மகிழ்ச்சி அடைவது, அந்த மகிழ்ச்சியை பல்வேறு வகையில் வெளிப்படுத்துவது மார்கத்தில் "வாஜிபான", 'பர்லான' கட்டாயக் கடமையான விடயமாகும். 

Monday, January 23, 2012

பதிலும் தெளிவும்.

இஸ்லாமிய உலகின் புதுமை புகட்டும் வஹ்ஹாபிகளை எதிர்த்து போர் தொடுக்கும் இஸ்லாத்தின் போர்வாள் என்று வர்ணிக்கப்படும் அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தின் தூண் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாபிழ் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலீ MA அவர்களினால் நிகழ்த்தப்பட்ட; வஹ்ஹாபிகளினால் இஸ்லாத்தின் பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்டு பொதுமக்களிடையே நிலவி வரும் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் அழகிய உபதேசம்.

Sunday, January 22, 2012

வஹ்ஹாபிகளின் பொய்களும் தகர்த்தெறியும் ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலீயும்.

வஹ்ஹாபிச வழி கேடர்களால் இஸ்லாத்தின் பெயரிலும், இமாம்கள் பெயரிலும் பொய்களைக் கூறி இஸ்லாத்தின் தூய்மையை மாசுபடுத்தும் இக்கொடியவர்களிடமிருந்து எம்மை அல்லாஹ் காப்பானாக. ஆமீன்.

மனோ இச்சைக்கும், பணத்துக்கும் அடிமையாகி மார்கத்தை கூறுபோடும் இந்நாசகாரர்களின் வாக்கை வேதம் என நம்பி வாழும் இளைஞர் யுவதிகளே! விழித்தெழுங்கள். நரகிற்கு விறகாக ஆகாதீர்கள். நீங்கள் யாருடைய வாக்கை வேதம் என நம்பி வழிதவறி செல்கின்றீர்களோ அந்த குழப்பவாதிகளால் மார்கத்தில் உண்டாக்கப்பட்ட குழப்பங்களையும் மார்க்கம் கூறும் உண்மையான போதனைகளையும் தெளிவுபடுத்துகிறார்கள் இந்தியாவைச் சேர்ந்த சங்கைக்குரிய அப்ழலுல் உலமா அஷ்ஷெய்க்  மௌலவீ அப்துல்லாஹ் ஜமாலீ MA அவர்கள்.

Friday, January 20, 2012

ஹிக்மத் என்றால் என்ன?


 சிந்தித்தால் சந்திப்பாய். (தொடர் கட்டுரை)
அன்பினிய சகோதரா!
உனக்கு ஒரு முக்கியம் விடயம் ஒன்றை கற்றுத்தர விரும்புகிறேன். இவ்விடயத்தை நீ தெரிந்துகொள்வது கட்டுரையில் நான் கூறப்போகும் விடயங்களை நீ விளங்கிக் கொள்வதற்கும் ஞானமென்று சொல்வது கேட்டு வெறிநாய் போலும் விஷப்பாம்பு போலும் சீறிப்பாய்ந்து ஞானமா? ஆணமா? என்று இறை ஞானத்தைக் கிண்டல் செய்யும் நயவஞ்சகர்களை மடக்குவதற்கும் உனக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். 

இக்கட்டுரையில் "வஹ்ததுள் வுஜூத்" இறைஞானம் பற்றியே எழுதுகிறேன். இந்த ஞானம்தான் "ஹிக்மத்" , "இல்முல் ஹிக்மத்" என்ற பெயர்களால் அழைக்கப் படுகிறது. எனவே இது பற்றி நீ முதலில் தெரிந்துகொள். 

Wednesday, January 18, 2012

அழகிய அல்குர்ஆன்.

அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதுபவர்கள் வரிசையில் "தபாரகல்லதீ" சூறாவினை ஓதுகிறார்கள் சங்கைக்குரிய காரீமிஷாரீ ராஷித் அலாபாஸி அன்னவர்கள். அல்லாஹ் தனது வேதத்தை ஓதுபவர்களுக்கு மட்டுமல்ல செவிமடுப்போருக்கும் நன்மை அளிக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்.

Monday, January 16, 2012

கொடியேற்றிய இறை தூதர் (ஸல்) அவர்கள்.



இன்று சுன்னத்வல் ஜமாஅத் மக்கள் அல்லாஹ்வுடைய தூதர் பெயரிலும் அவ்லியாக்கள் நல்லடியார்கள் பெயரிலும் கோடி ஏற்றி விழா எடுப்பதை ஒரு நல்லமலாக எடுத்து நடக்கிறார்கள். 

இந்த நல்லமலை சிலர் "பித்அத்" என்றும், "ஷிர்க்" என்றும் கூறி வருகின்றனர்.
தத்தமது நாட்டு தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்வது ஆகுமென தெரிந்த இவர்களுக்கு மார்கத்தில் உண்டான பெருமானார் (ஸல்) அவர்கள் செய்து வந்த ஒரு நல் அமலை எவ்வாறுதான் நிராகரிக்க முடிகிறதோ? தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் பதிலடியாய் "கொடியேற்றிய இறை தூதர் (ஸல்)" என்னும் தலைப்பில் இலங்கை நாட்டைச் சேர்ந்த அஷ்ஷஹீத் மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்கள் ஆற்றிய உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.

Friday, January 13, 2012

நவீன உலகின் இளைஞர்களின் நிலை.



 அன்பினிய இணைய அபிமானிகளே!
இன்றை நவீன உலகில் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அது இளைஞர்களை மையமாக வைத்தே மேட்கொள்ளப்பட்டு வருகிறது என்பது நிதர்சனம்.

இந்த அடிப்படையில் இன்று இளைஞர்களை யஹூதி நஸ்றானிகள் இஸ்லாத்தில் குழப்பம் விளைவிக்கும் ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். முஸ்லீம்கள் என்ற போர்வையில் இஸ்லாத்தை வேரறுக்கும் முயற்சியை அறியாத இளைஞர்கள் அதை சரி என நம்பி அவர்களின் புறம் சென்றுகொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்.

இந்த அடிப்பட்டைகளை மையமாக கொண்டு இந்திய நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ நிஜாமுதீன் அஹ்ஸனீ அவர்களால் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்வடைகிறோம்.

Sunday, January 8, 2012

அறியப்பட வேண்டிய அல்லாஹ்.



அல்லாஹ் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருப்பது கட்டாயக் கடமையாகும். அவனை அறிவதன் மூலமே மனிதன் தனது ஆன்மீக நிலையில் உயர்வைப் பெற முடியும் என்பதில் ஐயமில்லை. ஒரு மனிதன் அல்லாஹ்வை அறிய முற்படும் போது அவன் நேரான பாதையை தெரிந்தெடுக்க வேண்டும்.

நாம் அனைவரும் தொழுகையிலும் ஏனைய நேரங்கிலும் சூரத்துல் பாத்திஹா ஓதும் போது "இஹ்தினஸ் சிறாதல் முஸ்தகீம், சிறாதல்லதீன அன்அம்த அலைஹிம். இவ்வாறு நாம் ஓதுகிறோம். அதாவது "இறைவா எங்களுக்கு நேரான பாதையைக் காட்டுவாயாக. அந்தப்பாதை எத்தகையதென்றால் நீ யாருக்கெல்லாம் அருள் புரிந்தாயோ அவர்களுடைய பாதை" இவ்வாறு நாம் அனைவரும் ஓதுகிறோம். இவ்வசனங்களை நல்லடியார்கள் சென்ற பாதையை மறுப்பவர்களும், சகாபாக்கள் அவ்லியாக்களை அவமதிப்பவர்களும்  ஓதுகிறார்கள், ஏற்பவர்களும், மதித்து பின்பற்றி நடப்பவர்களும் ஓதுகிறார்கள். 

எனவே இதுதான் எதார்த்தம். நாம் நல்லோர் சென்ற பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும். சஹாபாக்களை அவ்லியாக்களை பின்பற்றவேண்டும். அவர்கள் சென்ற பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வை அறிந்து கொள்ள முடியும்.

Friday, January 6, 2012

மனம் கவர்ந்த இனிய இஸ்லாமிய கீதங்கள்

கடந்த ஆண்டுகளில் வெளியாகி எம் உள்ளங்களை கொள்ளை கொண்டு அனைவர் வாய்களிலும் உச்சரிக்கப்பட்ட இனிய உருது இஸ்லாமிய கீதங்களை வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.

Thursday, January 5, 2012

ஒடுக்கத்துப் புதன் ஓர் பார்வை.



அன்புள்ள சகோதர சகோதரிகளே!
சபர் மாத இறுதிப் புதன் கிழமையினையே ஒடுக்கத்துப் புதன் என்று அழைக்கின்றனர்.இம்மாதமானது மிடிமைக்குரிய மாதம் எனவும், இம்மாதத்தில்  எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்கலாகாது என்றும் மக்களிடம் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது.

இந்த நாளில் வாழை இலையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லீம்களிடம் குறிப்பாக இந்திய, இலங்கை முஸ்லீம்களிடம் இருந்து வந்தது. 
இவ்வழக்கம் இருந்து வந்த காலத்தில் இமாம்கள்போல் திறமையும் அறிவு முதிர்ச்சியும்  பெற்றிருந்த மார்க்க அறிஞர்கள் பலர் இருந்ததுங் கூட அவர்களில் எவரும் இவ்வழக்கம் இஸ்லாத்துக்கு முரனானதென்றோ, "பித்அத்" என்றோ, மூடநம்பிக்கை என்றோ சொன்னதுமில்லை. எழுதியதுமில்லை.

Wednesday, January 4, 2012

மத்ஹபுகளும் குழப்பங்களும்.

இஸ்லாத்தில் நன்மையை ஏவி தீமையை தடுப்பதும் நன்மையான காரியங்களை செய்து வருவதும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இதற்கு அல்குர்ஆனும் ஹதீசும் அத்தாட்சிகளாகும்.


ஹதீத் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகும். இன்று நவீனவாதிகள் பெருமானாரின் சொல்லை மாத்திரம் எடுத்து அதிலும் பல்வேறு குழப்பங்கள் விளைவித்து மக்களை நரகத்தின் பாதையில் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள் . இவர்களின் குழப்பங்களை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.


 الفتنة اشد من القتل குழப்பம் விளைவிப்பது கொலையை விட மிகப்பெரிய பாவமாகும். (நபி மொழி ) அந்த அடிப்படையில் அழகிய உபதேசம் ஒன்றினை எமக்களித்த சங்கைக்குரிய மௌலவி தாஜுதீன் அஹ்சநீ அவர்களின் உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம்

Tuesday, January 3, 2012

ஆத்மீக நிலைகள்.

இறை பேரின்ப அறிவை உண்டு அதன்படி வாழும் நபிமார்கள், வலீமார்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள பதவிகளின் அடிப்படையில் பல்வேறு நிலைகள் இருப்பது உண்மை. இதில் நான் என்ற அகந்தை கலைந்த கற்கும் எண்ணம் மாத்திரம் உடைய மனிதனுக்கே மிக நுட்பமாக தெளிவு கிடைக்கும். அந்த அடிப்படையில் ஆத்மீக நிலைகள் எனும் தலைப்பில் தெளிவு மிகு உரை நிகழ்த்துகிறார்கள் சங்கைக்குரிய மௌலவீ அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி அன்னவர்கள்.

Comment.