Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Monday, December 26, 2011

இரு நிலை உள்ள றசூல்.

தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்
-கடந்த 13  நவம்பர்  2011  அன்று வெளியான ஆக்கத்தொடர்-
நபீ (ஸல்) அவர்களுக்கு இரு நிலைகள் உள்ளன.

  1. தங்களை உயர்த்திப் பேசும் நிலை.
  2. தங்களை தாழ்த்திப் பேசும் நிலை. பணிவை வெளிப்படுத்தும் நிலை.   
  இவ்விரு நிலைகளில் தங்களை உயர்த்திப் பேசும் நிலையை "ஜலால்" என்றும், தாழ்த்திப் பேசும் நிலையை "ஜமால்" என்றும் சுருங்கச் சொல்லலாம்.


நான் உங்கள் போன்ற மனிதனே என்று சொன்ன நாபீகள் கோமான்.
انا سيد ولد ادم
(நான் ஆதமுடைய மக்களுடைய தலைவன் ) என்றும்,

انا اول من ينشق عنه القبر
(மறுமையில் கப்ருகளிலிருந்து முதன்முதலாக வெளியாகுபவன் நான்தான்) 

என்றும் கூறியுள்ளார்கள் என்பதை இங்கு சிந்தனைக்கெடுத்துப் பார்க்கவேண்டும்.மேலே எழுதிக் காட்டிய நபீகள் கோமானின் ஜலால் ஜமால் என்னும் இரு நிலைகளும் அல்லாஹ்விலும் உண்டு. 

Sunday, December 25, 2011

தெளிவு.

இன்று வஹ்ஹாபிகள் மறுக்கும் விடயங்களையும் குழம்பியுள்ள இளைஞர்களின் மனங்களையும் தெளிவு படுத்தும் வகையில் அழகிய உபதேசம் வழங்குகிறார்கள் இந்திய நாட்டைச்சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ சலீம் சிறாஜீ அவர்கள்.

அண்ணல் நபி ஒரு ரஹ்மத்.


இன்று நாம் சபர் மாதத்திலே இருந்து கொண்டிருக்கிறோம். இந்தமாதம் சுன்னத்வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளிவாயல்களிலும் வியாபாரஸ் தளங்களிலும் பூமான் நபீ புகழ் கூறும் புனித வித்ரிய்யாஹ் ஷரீபை ஓதி வருவது அன்று தொட்டு இன்று வரை மாறாத ஒன்றாக இருந்துவருகிறது. இடையில் தோன்றிய புதுமைவாதிகள் குழப்பங்களை உண்டு பண்ணுவதையும் பெருமானாரின் அகமியம் அந்தரங்கம் அறியாமல் கொக்கரிப்பதையும் நாம் பார்க்கிறோம். அகிலத்திற்கே அருட்கொடையான அந்த முத்து நபிமீது நாம் என்றும் சலவாத்து சாலாம் கூறி. அவர்கள் புகழைப் பாடி மறுமை நாளின் அன்னார் ஷபாஅத்திற்கு உரித்துடையவர்களாகுவோமாக. கசீததுள் வித்ரிய்யாஹ் டவுன்லோட் செய்ய அந்த அடிப்படையில் அண்ணல் நபி ஒரு ரஹ்மத் என்னும் தலைப்பில் இலங்கை நாட்டைச்சேர்ந்த Dr. அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் ஆற்றிய உரையினை உங்களுக்காய் வழங்குகின்றோம். . 

Saturday, December 24, 2011

வேறில்லை.





------------------------------------------------------------------------------------
அகந்தனில் இலங்கிய ஆதியை கண்டிட 
ஆஷிகே நீரும் ஆசைவைப்பீர் 
ஜோதி இலங்கிய துய்யோனைக் கண்டிட 
தொகுத்து நீ என்பதை அழித்துடுவீர்
 --------*---------

கல்பதன் காட்சியை கண்டு தரிசிக்க 
ஜதுபெனும் இஷ்கை ஏற்றிடுவீர் 
ஜாமிஉல் அஸ்மாவை ஞாபகம் உடன் கல்பில் 
காமிலிடம் கேட்டு தெரிந்திடுவீர்!
 --------*---------

காணலை நேரொத்த மாய துன்யாவினில் 
காலத்தை வீணிலே தள்ளிடாதீர் 
மாயுமும் மாய்ந்து மஹ்பூபைச் சேர்ந்து நீர்
மாறா அமிர்தத்தை அருந்திடுவீர்!
     --------*---------

ஆலத்தில் இலங்கிடும் அஹதெனும் பொருலதை
அனுதினம் அஹந்தனில் நினைத்திடுவீர்
கோலத்தில் அதுநின்று குறிப்பாயிலன்கிடும்
ஹூ என்பதை அன்றி வேறில்லையே !

இஸ்லாமிய இலக்குக்காக - ஆஷிகுல்லாஹ்- 

Thursday, December 22, 2011

நபி மூசா அலைஹிஸ்ஸலாமும் ஹளிர் வலீயும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் அவ்லியாக்களுக்கு இருக்கும் ஆற்றல்களை புரியாதவர்களும் புரியும் படி சாட்சி பகரும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹளிர் வலீ அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சம்பவத்தினை அழகிய முறையில் உபதேசமாய் விளக்குகிறார்கள் இலங்கை நாட்டைச்சேர்ந்த Dr. அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள்.

Tuesday, December 20, 2011

அவ்லியாக்களின் பாதை.

இலங்கையில் சுன்னத்வல் ஜமாஅத்தின் மாபெரும் தூண்களில் ஒருவராய் இருந்து இஸ்லாத்தை தெளிவுற எடுத்துரைத்த. மார்க்க விரோதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட. சங்கைக்குரிய மர்ஹூம் மௌலவீ MSM பாரூக் காதிரீ அன்னவர்காளால் "அவ்லியாக்களின் பாதை" எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது. (அன்னாரின் பிழைகளை அல்லாஹு நாயன் பொருத்தருளட்டும்.)

Saturday, December 17, 2011

கல்பின் தொழுகை.

திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் இரண்டு வசனங்கள் வருகிறது. அவ்விரு வசனங்களுக்கிடையிலும் தொடர்பிருக்கிறது. அத்தொடர்பினை உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக இக்கட்டுரையை எழுதுகிறோம். அல்லாஹுத்தஆலா அவனது அருள்மறையிலே கூறுகிறான்.
 حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموالله قانتين  
"நீங்கள் தொழுகைகளின் மீதும் நடுத் தொழுகையின்மீதும் பேணுதலாக இருந்துகொள்ளுங்கள்" என்று கூறுகிறான்.

صلوات என்ற சொல் صلاة என்ற சொல்லின் பன்மைச்சொல்லாகும். صلوات  என்று சொல்லுவதன் மூலம் ஐந்து நேர தொழுகைகளையும் உள்ளடங்கி விடுகின்றது. حافظوا على الصلوات என்று சொன்ன அல்லாஹ் பின்னாலே   والصلاة الوسطى என்று   சொல்லுகிறான்.  நாம் சிந்திக்க வேண்டியது இந்த இடத்திலேதான்.

Thursday, December 15, 2011

வஹ்ஹாபிச வழியும் வான் நபி மொழியும்.


இன்று உலகின் பயங்கர நோயாகிப் பல்கிப்பெருகிவரும் வஹ்ஹாபிச நோய் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துகிறார்கள் இலங்கை நாட்டைச்சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ Dr. அஷ் ஷெய்க் அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள். 

Tuesday, December 13, 2011

நான் எனும் நீ !

நான் எனைத்தேடியத்தில்
 நானின்றிப் போனேனே
வான் மறை ஒன்றின்றேல்
கானலாய் இருப்பேனே

கண்டவன் என்றப்பே! கண்
கண்டதும் என்றப்பே!
யாரிடம் சொல்லுவது
கண்டவர் யாருண்டு!

கற்களாய் முட்களாய்
செடிகளாய் மரங்களாய்
வஸ்துவாய் தெரிந்ததெல்லாம்
இன்று...

ஹக்கனாய் றப்பனாய்
ஆதியாய் நீதியாய்
பூர்வீக ஜோதியாய்
கண்டுகொண்ட இன்பநிலை
எதைக்கொண்டு உணரவைப்பேன்!

Sunday, December 11, 2011

இறை அருள்.

இஸ்லாமிய உலகில் பிரபல்யம் பெற்றவர்களும் சூபிசக்கலையில் (Phd.) கலாநிதி பட்டம் பெற்றவர்களும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களும் கத்தார் பல்கலைக்கழக பீடாதிபதிகளில் ஒருவருமான சங்கைக்குரிய Dr. மௌலவீ தீன் முஹம்மத் அல் அஸ்ஹரீ அவர்களால் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.

மனித உருவில் இறைவன்.

சூபிசத்துவத்தை பட்டவர்த்தனமாகவும் தெளிவாகவும் பேசி இறை அறிவை மறைவின்றிக்காட்டும் இலங்கை நாட்டைச்சேர்ந்த அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் "மனித உருவில் இறைவன்" எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம்மகிழ்வடைகிறது.

Wednesday, December 7, 2011

உதவி தேடுதல்.

  அன்பின் வாசகர்களே!
உலகிலுள்ள எந்த வஸ்துவுக்கும் பெறுமதி கூறமுடியும். ஆனால் இரண்டு விடயங்களைத்தவிர
  1.          அறிவு 
  2.          நேர்வழி (ஹிதாயத்)
 நபியுல்லாஹி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை எமனுக்கு  ராஜ பிரதிநிதியாக அனுப்பியபோது لان يهدي اللهبك رجلا  خير لك من الدنيا وما فيها முஆதே நீங்கள் எமனுக்கு  செல்கிறீர்கள். எமனிலுள்ள மக்களில் ஒருவரை அல்லாஹு தஆலா உங்களைக் கொண்டு நேர்வழிப் படுத்துவது இந்த உலகமும் உலகில் உள்ளவைகளும் உங்களிடம் இருப்பதைவிட சிறந்தது. என்று சொன்னார்கள் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள். அப்படியானால் ஹிதாயத்தின் மதிப்பை நாம் வரையறை செய்ய முடியுமா? இந்த உலகும் அதிலுள்ள அனைத்தும் இருந்தாலும் அதன் பெறுமதிக்கு ஈடாகுமா? ஆகவே நேர்வழிக்கு பெறுமதி கூறி மட்டிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Monday, December 5, 2011

இனிய இஸ்லாமிய கீதங்கள்

நெஞ்சை விட்டகலா இனிய இஸ்லாமிய கீதங்களை உங்களுக்காய் வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.

Sunday, December 4, 2011

சிறந்த படைப்பு.


இலங்கை நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஷம்சுல் உலமா அஷ்ஷெய்க் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் சிறந்த படைப்பு எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.

Friday, December 2, 2011

சங்கையான மாதங்கள்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய கலாநிதி ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அன்னவர்களால் புனித ஆசூரா தினத்தில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம்.

Comment.