நபிமார்களில் சிலர். (தொடர்...)
Posted by islamiyailakku on 1:41 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.
நபி துல்கிப்லி (ذو الكفل) அலைஹிஸ்ஸலாம்.
வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மகன் என்று கூறுகின்றனர். அவர்களது இயற்பெயர் பஷர் ஆகும். அய்யூப் அல்லைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பின் அனுப்பியதால் அல்லாஹ் இவர்களை துல்கிப்ல் என்றழைத்தான். ஏன் எனில் இவர்கள் அவனுக்கு வழிப்படுவதிலே மிக உறுதியானவர்களாக இருந்தார்கள். இவர்களது அடக்கஸ்தலம் ஷாம் தேசத்திலே தமஸ்கஸ் என்ற பகுதியிலே இருக்கிறது.
நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்.
இவர்கள் யூனுஸ் இப்னு மத்தா என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களை அல்லாஹ் சங்கையான நபியாக ஒரு கூட்டத்துக்கு அனுப்பி வைத்தான். இவர்களது உபதேசங்களை மக்கள் செவி ஏற்காத நேரம். வேதனையால் அல்லா இடம் முறை இட்ட வண்ணமாக கடலருகில் சென்று கொண்டிருந்த போது இவர்களை ஒரு மீனைக் கொண்டு அல்லாஹ் விழுங்க வைத்தான். மீனின் வயிற்றிலிருந்து கொண்டு அல்லாஹ் இவர்களுக்கு தன்னைக் காணச் செய்தான்.
நபி இம்ரான் அலைஹிஸ்ஸலாம்.
நபி மூஸா (கலீமுல்லாஹ்) அலைஹிஸ்ஸலாம்.
இவர்கள் பிர் அவ்ன் உடைய ஆட்சிக் காலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் வரலாறு நீண்டு நெடியதாகும். இவர்களது தடியை பாம்பாக இவர்கள் மாற்றி பல அற்புதங்களை காட்டி இருக்கிறார்கள். இவர்கள் பிற அவனுக்கு எதிராக கடுமையாக போராட்டம் செய்தார்கள்.
Categories: Sereis