மீலாத்...

Posted by islamiyailakku on 12:50 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் நேயர்களே! எமது இஸ்லாமிய இலக்கு சுன்னத் வல் ஜமாஅத் கருத்துக்களை பிரசித்தி பெற்ற உலமாக்களின் உரைகள்  மூலம் பரப்பி வருகிறது. இன்று குழப்பம் நறைந்த காலம் என்பதால் மக்கள்  அவதாணமாக இருக்க வேண்டும். 

நான் அன்று ஒரு நாள் வாகனத்தில்  செல்லும் போது எமது மதிப்பிற்குரிய இலங்கை  நாட்டைச் சேர்ந்த  கலாநிதி மௌலவீ  அல் ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களின் உரை ஒன்று கேட்டேன். அப்போது அதிலே அவர்கள் சூபிசம் பற்றி சூபிச வழியில் நடப்பது பற்றி பேசினார்கள். இறுதியிலே ஒரு விடயம் சொன்னார்கள். நாம் ஷரீஅத் உடைய வழியிலே சரியாக நடக்கும் போது நிச்சயமாக விலாயத் கிடைக்கும் என்று சொன்னார்கள். 

எனவே சுன்னத் வல் ஜமாஅத் வழி வாழ் நாம்  சூபிசம் எமது வாழ்வில் மிளிர வேண்டும் என்றால் ஷரீஅத்துடைய விடயங்களையும் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,

அன்புக்குரியவர்களே! எம்மை விட்டும் பிரிந்த சங்கைக்குரிய மௌலவீ  மர்ஹூம் MSM பாறூக் காதிரீ அவர்களால் இலங்கை நாட்டின் கல்முனை நகரில் மீலாத் விழா ஒன்றின் போது ஆற்றப்பட்ட ஒளி, ஒலி  வடிவிலான உரை கிடைத்திருக்கிறது அதிலே இரண்டு பகுதிகளை பதிவேற்றுகின்றேன். இன்ஷா அல்லாஹ் ஏனைய பகுதிகளை மிக விரைவில் பதிவேற்றுகின்றேன்

ஆசிரியர்- இஸ்லாமியஇலக்கு 


தொடரும்....
Categories: