ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் பத்ர் சஹாபாக்கள் நினைவு நாள்.

Posted by islamiyailakku on 1:46 AM
கடந்த 09ம் திகதி கத்தார் நாட்டில் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் வழி வாழ், சஹாபாக்கள் மீது பேரன்பு கொண்ட சகோதரர்களால் பத்ர் சஹாபாக்களையும்,  பத்ருப்போரையும் நினைவு கூர்ந்து மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. அல் ஹம்துலில்லாஹ்.

இந்த சகோதரர்கள் பத்ர் சஹாபாக்களின் பெயரை வைத்து ஒரு சங்கத்தை உருவாக்கி அச்சங்கத்தின் மூலம் பள்ளிவாயல் வளர்ச்சிப் பணி, மார்க்க வலுவூட்டல் பணி, சமூக நலப்பணி என தம்மை தமது மண்ணின் நலன் காக்கவும்,  தமது முஸ்லீம் சகோதரர்களின் நலன் காக்கவும் அர்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். மாஷா அல்லாஹ்.

இவர்களின் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் எமது இணையத்தளத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படுவது வழமையே அவற்றை  எமது இணையம்  பெரும்பாலும் எக்குறையுமின்றி முழுமையாகவே பதிவேற்றம் செய்து  வருகிறது. 

அவ்வடிப்படையில் அவர்களால் பத்ர் சஹாபாக்களின் புனித மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வின் புகைப்படங்களும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அவையும் இதோ உங்களின் பார்வைக்கு...

(((புகைப்படங்களை பெரிதாக பார்வை இட அவற்றின் மீது கிளிக் செய்யவும்.)))




 புனித திருக்கொடி ஏற்றத்துடன் நிகவு ஆரம்பிக்கபட்ட காட்சிகள்.


 சங்க உறுப்பினர் சகோதரர் பிஹாம் அவர்களால்
பத்ர் சஹாபாக்கள் மேலான புகழ் பாச்சரம் பாடப்படும் காட்சி.

 நிகழ்வு பாத்திஹா சொல்லி ஆரம்பிக்கப்படும் போது எடுக்கப்பட்ட காட்சி.







மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வு நடைபெறும் போது எடுக்கப்பட காட்சி.



 நிகழ்வில் கலந்து கொண்ட சங்கைக்குரிய மௌலவீ பாயாஸ் றப்பானீ
அவர்கள் உரை ஆற்றும் வேளை.





இறுதியாக துஆஹ் பிரார்த்தனை நடைபெற்று 
தபர்ரூக் விநியோகிக்கப் பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள். 

நன்றி 
தகவல்
ஹுப்புல் பத்ரிய்யீன் 
தோஹா கத்தார்.



Categories: ,