கலிமா தரும் விளக்கம்.

Posted by islamiyailakku on 12:35 AM
"நானும் எனக்கு முன் வந்த நபி மார்களும் கூறிய வார்த்தைகளில் மிக சிறந்த வார்த்தை லா இலாஹா இல்லால்லாஹு என்பதே ஆகும்" என்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அத்தகைய சிறப்புமிக்க வார்த்தைதான் ஈமானின் அடித்தளமாக, ஆணிவேராக இருக்கிறது.

அத்திவாரம் பலமாக இருந்ததால்தான் கட்டிடம் எழுப்பலாம். எனவே எந்த அமல் செய்வதாயினும் கலிமாவை தெளிவாகவும் அதன் ஆழத்தை அறிந்தும் நாம் செய்யும் போது எமக்கு பூரண பிரயோசனம் கிடைக்கும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே! யாருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை வழங்கி இருக்கிறானோ அவருக்கே அது கிடைக்கும். எனவே அதற்கான வழிகளை நாம் தேடிக் கொள்ளவேண்டும். 

எனவேதான் இப்போது நாம் வழங்கும் உரையினை தெளிவான மனதோடு, நான் என்ற செருப்பை கலைந்த நிலையிலே கேளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தையும், ஹிதாயத் பெற்ற நன் மக்களுக்கு தெளிவையும் வழங்குவான்.

எனவே அதனை மையமாகக் கொண்டு இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய மௌலவீ கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் கலிமாவின் விளக்கம் பற்றி ஆற்றப்பட்ட  உரையினை வழங்குகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.





உரையினை இலவசமாக  பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள (டவுன்லோட்) download என்பதை கிளிக் செய்யவும். 
 Download
Categories: