பூமான் நபி மீது புனித சலவாத்.

Posted by islamiyailakku on 4:15 AM


 அஸ்ஸலாமு அலைக்கும்.

 இந்நிகழ்வை எமக்கனுப்பி வைத்த ஹுப்புல் பத்ரியீன் சங்கத்திற்கு எமது நன்றிகள். அல்ஹம்துலில்லாஹ். மேலும் இது போன்று பல்வேறு நிகழ்வுகளையும் நடாத்த எமது வாழ்த்துக்கள். உங்கள் நிகழ்வுகள் எமக்கனுப்பப்படும் வேளைகளில் அவற்றை வெளியிட நாம் காத்திருக்கிறோம்.

கடந்த 10/02/2012 வெள்ளி நள்ளிரவு 12:30 மணிக்கு கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித திருக்கொடி ஏற்றத்துடன் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புனித சலவாத் மஜ்லிஸ் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் ஆரம்பத்தில் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அகமியம் பற்றிய சங்கைக்குரிய மௌலவீ நுழாருல்லாஹ் றப்பானீ அவர்களின் உரையும் அதனை அடுத்து முஹம்மது பிஹாம் அவர்களின் நபி நாயகத்தின் புகழ் பாடவந்த இனி பாடலும் பாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பூமான் நபி மீது புனித சலவாத் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அளவில்  சொல்லப்பட்டது. நிகழ்வின் இறுதியில் பெரிய துஆஹ் ஓதப்பட்டது. இதிலே கடந்த 05/02/2012 அன்று 68 வது பிறந்த தினத்தை எட்டிய சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களுக்காக விசேட துஅஹ் பிரார்தனை செய்யப்பட்டது.

அதன் பின் கலந்து கொண்ட 60  ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு உணவும் தபர்ரூக்கும் வழங்கப்பட்டு சல்வாத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்  

 புகைப்படங்கள் உள்ளே...
  



















Categories: , ,