அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்

Posted by islamiyailakku on 1:27 AM

     அண்ணல்  என் இல்லம் வந்தால் அவர்களை எப்படி வரவேற்பேன்.
      அஸ்ஸலாமு அலைக்கும் முகமன் கூறி ஆரத்தழுவ விரைவேனா
      சலவாத்தை என் நெஞ்சில் நிறைத்து சப்தத்துடனே  ஒலிப்பேனா
       ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
       ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
;
     களிப்பின் கடலில் ஆளாய் மிளிர்ந்து கண்ணீர் வழியப் பார்ப்பேனா
      கண்களில் வெளிச்சம் அதிகமாகி காணமுடியாமல் அழுவேனா
     ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ;
      ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

       வாழ்த்திக் கவிதை பாட நினைத்தும் வார்த்தை வராமல் தவிப்பேனா
       வார்த்தைகள் கோடி வளமாய் எழுந்தும் நாவு எழும்பாமல் திகைப்பேனா 
      சிந்தனை இழந்து செயல்பட மறந்து சிலையாய் நானும் நிற்பேனா 
       உணர்ச்சிகள் மீறி உயிர் நிலைமாறி தரையில் வீழ்ந்து சரிவேனா
      ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
       ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

இஸ்லாமிய இலக்குக்காக - தாஹா மினா.
நன்றி.
Categories: ,