பிரபஞ்ச ரகசியம். - உரை

Posted by islamiyailakku on 12:35 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாம் என்பதை இரண்டு நிலைகளில் நோக்கலாம். 
 
 1. மேலோட்டம்.
 2. உள்ளோட்டம்.

இதில் மேலோட்டம் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உள்ளோட்டம் என்பது அனைவருடைய பகுத்தறிவுக்கும் சரி எனப்படாது. அல்லாஹ் சர்வலோக ரட்சகன்; அவனுடைய பேச்சுதான் இறைவேதம். 

சாதாரண மனிதர்கள் பேசும் போதே அதனை வெளியோட்டமாக பார்த்தல் சாதரணமாக தெரிந்தாலும், ஆழமாக சிந்தனை செய்து பார்த்தல் அதில் எதார்த்தமான தாற்ப்பெரியம் மிக்க கருத்துக்கள் நிறைந்திருப்பது விளங்கும். சாதாரண மனிதர்களுடைய பேச்சிலேயே இப்படி இருப்பின். அனைத்தையும் படைத்த அந்த நாயனின் பேச்சு எத்தனை வலுப்பமானதாய் இருக்கும், அவனது ஹபீபாகிய, உலகம் தோன்ற காரணமான அந்த முத்து நபியின் பேச்சில் எத்துனை ஆழம் பொதிந்திருக்கும்.

உதாரணமாக அறபா வெளியில்  நபி பெருமானார் உரையாற்றும் போது
  اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتى ورضيت لكم الإسلام دينا  ((அல்யவ்ம அக்மல்து லகும் தீனக்கும்....)) என்ற திருமறை வசனம் அருளப்பட்ட போது ஒரு சில சகபாக்களைத்தவிர ஏனையோர் சிரித்து சந்தோசப்பட்டனர். ஒரு சில சகாபாப் பெருமக்கள் அந்த வசனத்தின் உள்ளோட்டத்தை, ஆழத்தை உணர்ந்தார்கள் அதன் விளைவாக அழத்தொடங்கி விட்டார்கள். ஏன் என்று வினவப்பட்ட போது நபி பெருமானார் (ஸல்-அம்)) எம்மை விட்டுப் பிரியப்போகிரர்கள் என்று சொன்னார்கள். 

இந்த வசனத்தை மோலோட்டமாக பார்த்தால் இப்படி ஒரு ஆழமான தத்துவம் அதில் புதைந்திருப்பதை உணர முடிகிறதா? அன்பு சகோதர, சகோதரிகளே! இது போன்றுதான் இறைவனின் புனித வசனங்களும் பெருமானாரின் அருள் மொழிகளும் இருக்கின்றன. 

அந்த அடிப்படையில் ஆழமான திருமறையின் அருள் வசனங்களுக்கும், பெருமானாரின் அருள் மொழிகளுக்கும் ஆழமான கருத்துக்களை ஆராய்ந்து அறிஞர்களால் ஆற்றப்பட்ம் உரைகளின் வரிசையில், சங்கைக்குரிய ஷம்சுல் உலமா, ஜவ்ஹருள் அமல், கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் ஆற்றப்பட்ட "பிரபஞ்ச ரகசியம்" என்னும் ஆன்மீக உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

Categories: