Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Friday, July 27, 2012

பாலை மனலில் மனம் கமழும் அஜ்மீரின் ரோஜா ஏந்தல் ஹாஜா.

கடந்த மாதம் ஹஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழி அவர்களின் நினைவுதினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அவ்வடிப்படையில் அரபு மண்ணிலும் அண்ணல் ஹஜாவின் மனம் வீச அல்லாஹ் விரும்பினான். 

அதன் விளைவே கத்தார் நாட்டில் ஹுப்புல் பத்ரியீன் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தொண்ணூறு இலட்சம் மக்களை இஸ்லாத்தில் அழைத்த மாபெரும் மகான் அண்ணல் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அவர்களதும் அன்னாரின் அருந்த்தவ மைந்தர் சாஹிபே ஜலால் ஹஜா பக்ருத்தீன் சிஷ்தீ அவர்களதும் இரண்டாம் வருட ஹாஜாஜீ உரூஸ் மனாகிப் மஜ்லிஸ் கடந்த 20/07/2012 நள்ளிரவு 12 மணிக்கு மௌலவீ நுழாருல்லாஹ் றப்பானீ அவர்கள் பாத்திஹா ஓத மௌலவீ முரீத் றப்பானீ அவர்கள் துஅஹ் ஓத முராதிய்யஹ் முழக்கத்துடன் புனித திருக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.
 திருக்கொடி ஏற்றத்தினை அடுத்து ஹுப்புல் பத்ரிய்யீன் அங்கத்தவர்களில்  ஒருவரான முஹம்மது பிஹாம் அவர்களால் ஹாஜா நாயகம் அவர்களின் புகழேந்திவந்த இனிய இஸ்லாமிய கீதம் ஒன்று பாடப்பட்டது.
அதனை அடுத்து மகான்களின் பெயரிலான புனித மௌலித் பாராயண மஜ்லிஸ் நிகழ்வு நடைபெற்றது.



மஜ்லிஸ் நிகழ்விலே அடுத்து  முஹிப்பீன்கள் அனைவரும் எழுந்து நின்று சங்கையாக ஹாலிறூ பாச்சரம் இசைத்தனர்.
அடுத்த நிகழ்வாக மௌலவீ  MA நஸீம் அஹ்மத் றப்பானீ அவர்களால் மகான் ஹாஜா நாயகம் அவர்கள் பற்றியும், ரமழான் பற்றியும்  மார்க்க சொற்பொழிவு ஆற்றப்பட்டது 
 அதனைத்தொடர்ந்து ஹுப்புல் பத்ரியீன் செயலாளர் MHM அஸாஹிம் அவர்களால் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிதி, உடல் உதவிகள் செய்த, நிகழ்வில் கலந்து கொண்ட உலமாக்கள், சங்க உருப்பினர்களுக்கும் நன்றிகளைத்தெரிவித்து நன்றி உரை ஆற்றினார்.
 நிகழ்வின் இறுதியில் சங்கைக்குரிய மௌலவீ  AAM பாயாஸ் றப்பானீ அவர்களால் துஆப் பிரார்த்தனை செய்யப்பட்டு நிகழ்வுகள்  சலவாத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

அன்று சங்கையான ரமழான் முதல் நோன்பு என்ற படியால் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு சஹர்  உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



தகவல் 
நிருவாகம் 
ஹுப்புல் பத்ரியீன் 
தோஹா - கத்தார்.

Sunday, July 22, 2012

மகான் பீர் முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் ஞானப் பாடல்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

எம்மிடம் எமது வாசகர் ஒருவர் வேண்டிக் கொண்டதன் பிரகாரம் மகான் பீர் முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் இறை ஞானப் பாடல்களை எமது இணையத்தளம் வெளியிடுகிறது.

இப்பாடல்களை நூல்வடிவில் வெளியீடு செய்த ஹாஜி O.S. ஷாஹுல் ஹமீது அவர்களுக்கு எமது நன்றிகள். 
ThiruppaadalThokuppuPart1
ThiruppaadalThokuppuPart2 ThiruppaadalThokuppuPart3 ThiruppaadalThokuppuPart4

Friday, July 20, 2012

நோன்பு மாதம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது இஸ்லாமிய இலக்கின் வாசகர்கள் அனைவருக்கும் பூத்துக் குலுங்கும் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்.

அன்பின் வாசகர்களே நோன்பு நமக்கு அருளப்பட்ட மிகப்பெரிய அல்லாஹ்வின் அருட்கொடையாகவும், அவனளவில் எம்மை சேர்த்து வைக்கும் பாலமாகவும் இலங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இம்மாதம் மிகவும் சங்கையாக எமது நடத்தை, பேச்சுக்கள், வியாபாரங்கள், என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற வேண்டும். இமாதம் எமக்களிக்கும் பயிற்ச்சியை எமது வாழ்வில் அடுத்துவரும் நாட்களிலும் நாம் எடுத்து நடக்கவேண்டும். அப்போதுதான் அல்லாஹு சுப்ஹானஹு தஆலாவை   எம்மால் அடையமுடியும்.
இன்ஷா அல்லாஹ் எமது இஸ்லாமிய இலக்கில் "நோன்பின் சட்டங்கள்" தொடர்பாக இலங்கை நாட்டைச்சேர்ந்த சங்கைக்குரிய ஷம்சுல் உலமா, ஜவ்ஹருள் அமல், கலாநிதி, மௌலவீ  அல்ஹாஜ்  அப்துர் றஊப்  மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் ஆற்றப்பட்ட உரையினை இம்மாதம் முழுவதும் எம்மால் முடிந்தளவு வழங்குவது என முடி செய்துள்ளோம்.

அதனடிப்படையில் "நோன்பு மாதம்" எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.


Tuesday, July 10, 2012

ஹஜாஜீ 26 ஆவது மகா கந்தூரியும் அலங்கார வேலைகளும்.

இலங்கையின் காத்தான்குடி நகரில் அமைந்துள்ள பத்ரிய்யாஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இன்று அஜ்மீரின் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (ரழி) அவர்களதும், அவர்களது அருந்தவப் புதல்வர் ஹாஜா பக்ருத்தீன் சிஷ்தீ அவர்களதும் 26 ஆவது வருட மகா கந்தூரி நிகழ்வு இன்று கொடி  ஏற்றத்துடன் ஆரம்பமாக இருக்கிறது. அதற்கான அலங்கார வேலைகள் மிக சிறப்பாக நடைபெற்று இருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

அது தொடர்பாக எமக்கு கிடைத்த சில புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (புகைப்படங்கள் சகோதரர் ரமீஸ் அவர்களின் முக நூல் (facebook) இல் இருந்து எடுக்கப்பட்டது)








இஸ்லாமிய இலக்கின் 
நன்றிகள் .

Monday, July 9, 2012

இரத்த தானம்! அஷ் ஷுப்பன் நலன் புரிச்சங்கம்-கத்தார் கிளை.

 இலங்கை நாட்டில் காத்தான்குடி நகரில் சமூக நலன் கொண்ட இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட அஷ் ஷுப்பன் நலன் புரிச்சங்கத்தின் கத்தார் நாட்டுக்  கிளையினால் கடந்த 05-07-2012 வியாழன் மாலை 03:00 மணிக்கு முந்தஸஹ் திறந்த வெளியரங்கில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது இதில்   சமூக நலன் கொண்ட பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


















 கத்தாரிலுள்ள ஹமத் (மெடிகல் கோப்ரேசென்) வைத்திய சாலைக்கே இரத்தம் வழங்கப்பட்டது. அவர்களே குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்து பெற்றுச்சென்றனர்.






தகவல்.
நிருவாகம்  
அஷ் ஷுப்பான் 
தோஹா- கட்டார்.

Comment.