Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Friday, November 25, 2011

பிஸ்மில்லாஹ்வின் சிறப்பு

இந்திய நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவி அவர்களால் பிஸ்மில்லாஹ்வின் சிறப்பு எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம் our thanks to- Muhieddeen TV

Saturday, November 19, 2011

வலீமார்களின் ஆற்றல் .



அல்லாஹுத்  தஆலா "அவ்லியாஉல்லாஹ்" எனப்படுகின்ற அவனது நேசர்கலான, அவனது நண்பர்களான, அவனது அதிகாரிகளான அந்த மகான்களுக்கு எல்லா சக்திகளையும் கொடுத்திருக்கிறான். அவன் அவ்லியாக்களுக்கு கொடுத்திருக்கின்ற சக்திகளை யாராலும் மட்டிட முடியாத அளவு வழங்கி இருக்கிறான். அவர்கள் அல்லாஹுத்தஆலாவால் செய்யப்படும் எல்லா வேலைகளையும் அவ்லியாக்கள் செய்வார்கள். இவ்வாறுதான் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த நாங்கள் நம்ப வேண்டும். இவ்வாறு நம்புவதால் ஒருபோதும் அல்லாஹ்வுக்கு இணை ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுடைய சக்தி "عطائي" அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டவைகள். அவர்களுக்கு சுயமாக உண்டானவை அல்ல. ஆனால் அல்லாஹ்வுடைய சக்தி "ذاتي " அதாவது அவனுக்கு யாராலும் வழங்கப்படாத தனக்குத் தானே உண்டான சக்தி ஆகும்.


Thursday, November 17, 2011

இறை இறக்கம்.

இணைய அபிமானிகளே சன்மார்கத்தை தெளிவுற எடுத்துரைக்கும் சங்கைக்குரிய சிறப்பான உபதேசங்களை தேர்ந்தெடுத்து அதை உங்களுக்கு வழங்குகின்றோம். இவ்வடிப்படையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த கலாநிதி சங்கைக்குரிய ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் புனித சஹீஹுல் புஹாரீ நிகழ்வின்போது. இரவின் பிற்பகுதியில் அல்லாஹுத் தஆலா கீழ் வானுக்கு இறங்குகிறான்" என்ற நபிமொழிக்கு அளிக்கப்ட்ட சிறந்த விளக்கத்தினை உங்களுக்காய் வழங்குவதில் இஸ்லாமிய இலக்கு மகிழ்வடைகிறது.

அதன் தொடரில் இலங்கையில் வாழும் மற்றுமொரு சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டிருந்தது அதன் பயன் கருதி அதையும் உங்களுக்காய் வழங்குகின்றோம்)

Wednesday, November 16, 2011

அவ்லியாக்கள் விடயத்தில் தெளிவு.

இலங்கையைச் சேர்ந்த சங்கைக்குரிய மர்ஹூம் மௌலவீ பாறூக் காதிரீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்காய் வழங்குகின்றோம்.அன்னாரை அல்லாஹுத்தஆலா பொருத்தருளட்டும்.ஆமீன்

Tuesday, November 15, 2011

காரூண்ய நபீ நாதரின் உலக வாழ்வின் இறுதி நிமிடங்கள்...


இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவதாவது:

நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் சாய்ந்திருந்தார்கள். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து ஆம்!என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.

Sunday, November 13, 2011

தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ்.

-கடந்த 12 ஒக்டோபர் 2011  அன்று வெளியான ஆக்கத்தொடர்-

திருக் குர்ஆனில் நபீ (ஸல்) அவர்கள் பல இடங்களில் அழைக்கப் பட்டிருந்தாலும் எந்த ஓர் இடத்திலாவது அவர்கள் முஹம்மத் என்ற பெயர் கொண்டு அழைக்கப் படவில்லை.

மாறாக யா அய்யுஹன் நபிய்யு, யா அய்யுஹல் முஸ்ஸம்மிலு, யா அய்யுஹல் முத்தத்திரு என்று சிறப்புப் பெயர்கள் கொண்டு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்கள். முஹம்மத் என்ற சொல் திருக்குர்ஆனில்  ஓர் இடத்தில் மட்டும் கூறப்பட்டிருந்தாலும் அது றசூல் என்று அவர்களை மக்களுக்குச் சொல்வதற்காகவே கூறப் பட்டுள்ளதே அன்றி அவர்கள் அழைக்கப்படவில்லை.

Friday, November 11, 2011

அழியாத தத்துவங்கள்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த அஸ் ஷெய்க் கலாநிதி ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் அழியாத தத்துவங்கள் என்னும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்காய் வழங்குகின்றோம்.

Wednesday, November 9, 2011

-தூய்மை- உன்னுடன் ஒரு நிமிடம்!


ஒரு கணம் சிந்தித்துக் கொள்! உன் பார்வை, உன் பேச்சு, உன் உணர்வு, உன் இதயம், அதன் எண்ணம் இவற்றை நீயே நீயாய் ஓர் கேள்வி கேள்! அதன் தூய்மை தன்மையை அறியும் வண்ணம். 

கடல்  அடியில் முத்துக்களும் இருப்பதுண்டு பெரும் பாறைகளும் கிடைப்பதுண்டு. எதை நீ பார்பதெனினும் ஆழத்தில் சென்றால்தானே முடியும் கரையில் தத்தளிக்கும் உனக்கு எவ்வாறு உணர முடியும் ஆழ்மனதில் உள்ளது எது என்று. 


கோபம், பொறாமை, வஞ்சகம், கபடம், எரிச்சல் இவ்வாறு உன் மனதை ஆட்கொண்ட பிணிகளை, கெட்ட நோய்களை சுகப்படுத்தி தூய்மைப் படுத்தும் வழியை தேடாமல் அதை வளர்க்கும் படியே நடக்கிறாயே! 

Comment.