Sunnath Wal Jamaath Website

  • WELCOME TO ATPUTHAM

    எமது இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

  • SUNNATH WAL JAMAATH AQEEDA

    அல்லாஹ்வின் அகமியங்களையும் அவன் படைப்புகளின் அந்தரங்க நிலைகளையும் எடுத்து விளக்கும் மார்க்க உரைகள் ...

  • GOOD THOUGHT

    நல்லதைப் பேசுங்கள், நல்லெண்ணம் கொள்ளுங்கள் பிறர் குறைகளை வெளிப்படுத்தாதீர் அல்லாஹ் உங்களின் குறைகளை நாளை மறுமையில் வெளிப்படுத்தமாட்டான்...

Saturday, July 16, 2011

உணவுகளின் மருத்துவக் குணங்கள்.



1.    பேரிச்சம்பழம்

செய்வினை விஷம் குணமாக! 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது. 

வாய்வுத் தொல்லை நீங்க! 
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம். 



2.    ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க 
அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள். 

வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க 
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும். 


Wednesday, July 13, 2011


அன்பிற்கினிய எமது வாசகர்கள் அனைவருக்கும் பூத்துக் குலுங்கும் புனித நோன்பு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 




****************************************

தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்.


தராவீஹ் தொழுகை இருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள் - Evidence of 20 Rakath Taraweeh Prayer

ஆக்கம்: நபீஸ் முஹ்யித்தீன் 



முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் அமல்கள் அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுகிறார்கள். இந்த அமல்களில் குறைவுகளை உண்டாக்கவும், சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் தடுத்திடவும் சிலர் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் சில காலங்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் தோன்றினர். அவர்களின் கூற்றுக்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளுக்கும், ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், இமாம்கள் மற்றும் நம் முன்னோர்களான மகான்களின் நடைமுறைகளுக்கும் மாற்றமாக இருந்தது.



அதில் அவர்கள் மக்கள்களின் அமல்களை குறைத்து மக்களை ஷைத்தானிய பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியில் ஒரு பிரிவாக ரமலான் மாதத்தில் கூடிய பலன்களைத் தரும் இருபது  

Sunday, July 10, 2011

நபி மொழிகள்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள் (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1906ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 





கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1907






Saturday, July 9, 2011

பூமான் நபியின் புகழ் கூறும் புனித கசீததுல் புர்தஹ்.



பூமான் நபியின் புகழ் கூறும் புனித கசீததுல் புர்தஹ் ஷரீப் நிகழ்ச்சி மாதம் தோறும் இறுதி வியாழன் இரவு 10 மணிக்கு கட்டார் நாட்டில் நடை பெறுவது வழக்கமாகும். இதனடிப்படையில் நேற்று 27 - 07 - 2011 அன்று சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாக்களும் பெருமானாரில் அன்பு கொண்ட சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்வின் இறுதியில் மௌலவீ நஸீம் அஹ்மத் றப்பானீ அவர்களால்  புனித புர்தஹ் ஷரீபின் சிறப்புகள் பற்றியும் நோன்பின் மாண்பு பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.



Thursday, July 7, 2011

நோன்பின் மாண்பு

அஸ்ஸலாமு  அலைக்கும்
எம்மை எதிர் நோகிக் கொண்டிருக்கும் புனித ரமழான் அல்லாஹு தஆலா எமக்களித்த பெரும் அருட்கொடைகளில் ஒன்றாகும்.
  1. கலிமா
  2. தொழுகை
  3. நோன்பு  
  4. ஸகாத்
  5. ஹஜ்         
இவ்வாறு அவன் எமக்களித்த 5 கடமைகளில் நோன்பு மூன்றாம் இடத்தையும் ஸகாத் 4 ம் இடத்தையும் பிடிக்கிறது. இந்த நோன்புடைய மாண்புகள் ஏராளமாகவே இருக்கிறது.
قال تعالى:  يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون .
அல்லாஹு தஆலா அவனது அருமறையிலே கூறுகிறான்
ஈமான் கொண்டவர்களே உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே உங்களுக்கும் நோன்பு கடமையாகப் பட்டுள்ளது நீங்கள் தக்வா தரிகளாக இருப்பதற்காக என்று கூறுகிறான்


Comment.