சலவாத்துல்ஆலில் கத்ரி.

Posted by islamiyailakku on 10:57 AM

  صلاة العالي القدر

 اَللهُمَّ صَلِّ عَلَى سَيّدِنَّا مُحَمَّدِنِ النَّبِيِّ الْاُمِّيِّ الْحَبِيْبِ الْعَالِى الْقَدْرِ الْعَظِيْمٍ الْجَاهِ بِقَدْرِ   

عَظْمَةِ ذَاتِكَ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ

அல்லாஹும்ம சல்லி அலா செய்யிதினா முஹம்மதினினின் நபிய்யில் உம்மிய்யில் ஹபீபில் ஆலில் கத்ரில் அழீமில் ஜாஹி பிகத்ரி அழ்மதி தாதிக வஅலா ஆலிஹீ வஸஹ்பிஹீ வசல்லிம்.
 
இதனை ஒருவன் ஒவ்வொரு வெள்ளி இரவிலும் வழக்கமாக ஒரு தடவையாவது ஓதிவரின் அவன் மரணித்ததும் அவனைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே ஹாழிராஹி நல்லடக்கம் செய்வார்கள். என்று இமாம் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள். இந்தக்கருத்தை செய்யித் அஹ்மத் தஹ்லான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் தங்காளின் "மஜ்மூஆ" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். 

இதனைப் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே வழக்கமாக ஓதி வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து  மகத்துவத்தை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

இது இத்துனை மகத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் ஒவ்வொரு இரவும் பத்து  தடவைகளும் வெள்ளிக்கிழமைகளில் 100 தடவையும் வழக்கமாக ஓதி வருதல் சிறப்புடையது எனப் பெரியோர்கள் கூறி இருக்கிறார்கள்.

இதை எமக்கு அனுப்பிய சகோதரர் அஸாஹிம் அவர்களுக்கு எமது நன்றிகள்.

குறிப்பு:
"யா அல்லாஹ் இதை ஓதுபவர்கள் மூலமாக கிடைக்கும் நன்மைகளை போல் ஒரு மடங்கு நன்மையை  இறையடி சேர்ந்த இவரது சகோதரி ஷர்மிலா அவர்களுக்கு காணிக்கையாக்குவாயாக. ஆமீன்"